ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழகத்தில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரவர் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் ஓட்டளிக்கச் செல்லவில்லை. சில படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படாமல் நடந்ததும் தெரிய வந்துள்ளது.
மணிரத்னம், சிலம்பரசன் 'தக்லைப்' படப்பிடிப்பில் இருப்பதால் அவர்கள் ஓட்டு அளிக்கவில்லை என்கிறார்கள். அது போல 'தி கோட்' படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே ஓட்டளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு மட்டும் நேற்று ஓட்டளிக்க வசதியாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார்களாம். அதேசமயம் படக்குழுவைச் சேர்ந்த வேறு யாருக்கும் ஓட்டளிக்க வசதியாக ஏன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜய், அவர் ஓட்டளித்தால் மட்டும் என்று நினைக்காமல் மற்றவர்களும் ஜனநாயக கடமை ஆற்ற வசதியாக தயாரிப்பாளரை வலியுறுத்தி இருக்க வேண்டுமல்லவா என்கிறார்கள்.