அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர். அவரது தயாரிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'மைதான்'. இப்படத்தில் அஜய் தேவகன் கதாநாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக பிரியாமணி நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரிமீயர் காட்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பிரியாமணி புகைப்படக்காரர்களுக்கு 'போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் தயாரிப்பாளர் போனி கபூரும் சேர்ந்து நின்ற போது அவரை தோள் மீதும், இடுப்பின் மீதும் கை வைத்து 'போஸ்' கொடுத்ததை சமூக வலைத்தளங்களில் கடுமையாக ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். போனி கபூரின் செயலால் பிரியாமணி என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் பொதுவெளியில் இப்படியெல்லாம் தொட வேண்டிய அவசியம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். போனி கபூர் செயல் வேண்டுமென்றே செய்தது போல் இருக்கிறது என்றும் கண்டித்து வருகிறார்கள்.
போனி கபூர் பிரியாமணியை எப்படியெல்லாம் தொட்டார் என்பதை விதவிதமான புகைப்படங்கள் மூலம் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். விரைவில் இது குறித்து போனி கபூர் மறுப்பு அறிக்கை தரலாம்.