நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தமிழில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர். அவரது தயாரிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படம் 'மைதான்'. இப்படத்தில் அஜய் தேவகன் கதாநாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக பிரியாமணி நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரிமீயர் காட்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பிரியாமணி புகைப்படக்காரர்களுக்கு 'போஸ்' கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடன் தயாரிப்பாளர் போனி கபூரும் சேர்ந்து நின்ற போது அவரை தோள் மீதும், இடுப்பின் மீதும் கை வைத்து 'போஸ்' கொடுத்ததை சமூக வலைத்தளங்களில் கடுமையாக ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். போனி கபூரின் செயலால் பிரியாமணி என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் பொதுவெளியில் இப்படியெல்லாம் தொட வேண்டிய அவசியம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். போனி கபூர் செயல் வேண்டுமென்றே செய்தது போல் இருக்கிறது என்றும் கண்டித்து வருகிறார்கள்.
போனி கபூர் பிரியாமணியை எப்படியெல்லாம் தொட்டார் என்பதை விதவிதமான புகைப்படங்கள் மூலம் பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். விரைவில் இது குறித்து போனி கபூர் மறுப்பு அறிக்கை தரலாம்.