'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயாள் தற்போது இயக்கி வரும் படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'. குழந்தைகளை மையமாக வைத்து இதுவரை பேண்டசி படங்கள், கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக குழந்தைகளை வைத்து அரசியல் படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் யோகி பாபுவும், செந்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர இமயவர்மன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, பவஸ் ஆகிய 4 சிறுவர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் 'பருத்தி வீரன்' சரவணன், சுப்பு பஞ்சு, லிஸ்ஸி ஆண்டனி, 'பிராங்ஸ்டர்' ராகுல், 'பிச்சைக்காரன்' மூர்த்தி, வையாபுரி, சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.
படம் பற்றி சங்கர் தயாள் கூறும்போது, "குழந்தைகளை வைத்து அரசியல் படம் எதுவும் இதுவரை வரவில்லை. அவர்கள்தான் இந்தியாவின் வருங்காலத் தூண்கள். அவர்களுக்கு அரசியல் தெளிவும் அறிவும் படிக்கிற காலத்திலேயே முக்கியம் என்பதால் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்திய அரசியல் நகைச்சுவை படமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளேன்.
செந்தில் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்துகிறார். அதன் பொதுச் செயலாளராக யோகிபாபு இருக்கிறார். அவர் தானே தலைவராக சில சூழ்ச்சிகள் செய்கிறார். இவர்களுக்கு இடையில் ஒரு பள்ளி மாணவனும் போட்டியிடுகிறான். அதன் பிறகு நடக்கும் விஷயங்களை காமெடியாக சொல்லும் படம்" என்றார்.