'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி ஹீரோயின். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
படத்தின் 4வது கட்ட படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் விஜய். படப்பிடிப்பு இடைவெளியில் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த புகைப்படங்களை விஜய் நற்பணி இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். பிறகு அந்த படத்தை அவர் நீக்கிவிட்டார்.
காவி உடை அணிந்த கோவில் நிர்வாகிகளுடன் இருப்பதை பகிர்ந்து, பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் தனது ஆதரவை மறைமுகமாக தெரிவிப்பது மாதிரியாக விமர்சனம் வந்ததால் அந்த போட்டோவை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர்.