டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது 'அக்கா' என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். தர்மராஜ் ஷெட்டி இயக்கும் இத்தொடரில் 'கபாலி' பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்துள்ளது.
அது குறித்து கீர்த்தி சுரேஷ், “கேரளாவில் என்னுடைய வனவாசம் முடிந்து 40 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு சோஷியல் மீடியாவிற்கும் திரும்பிவிட்டேன். அற்புதமான படப்பிடிப்பை முடித்து வீட்டுக்கு வந்துள்ளேன். என்னுடைய அடுத்த படப்பிடிப்புகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. ஆச்சரியமாக வெயிலின் சூட்டைத் தணிக்க மிஸ் மழையும் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். மீண்டும் இணைவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தி தற்போது தமிழில் 'ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.