அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பின் விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், ரத்னம் படத்தின் கதை குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஹரி. அதில், நாட்டில் 60 சதவீத பேர் கெட்டவர்கள், 40 சதவீதம் பேர் நல்லவர்கள். கெட்டவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற ஒருவன் வீறு கொண்டு எழுகிறான். அவன்தான் ரத்னம். சினிமாவில் மட்டுமே இது போன்ற சூப்பர் ஹீரோக்களை பார்க்க முடியும். நல்லவர்களின் வலியை போக்கும் ஒருவன் தான் ஹீரோவாக உருவாக முடியும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஹீரோ கேரக்டரில் தான் ரத்னம் படத்தில் விஷால் நடித்துள்ளார். சாமி, சிங்கம் படங்களை விட இந்த படத்தில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஹரி.