ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரண்யா - ஸ்ரீதேவி இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்யா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி சரண்யா மீது விருகம்பாக்கம் போலீஸில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். அதோடு இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.