நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரண்யா - ஸ்ரீதேவி இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்யா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி சரண்யா மீது விருகம்பாக்கம் போலீஸில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். அதோடு இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.