‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மிருணாள் தாக்கூர் என்றால் யார் என்று தான் தென்னிந்திய ரசிகர்கள் கேட்டிருப்பார்கள். ஆனால் அழகிய காதல் கவிதையாக வெளியான சீதாராமம் படத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார் மிருணாள் தாக்கூர். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நானி நடிப்பில் வெளியான ஹாய் நன்னா திரைப்படமும் அவரது சிறப்பான நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பேமிலி ஸ்டார் திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.
கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த இயக்குனர் பரசுராம் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக ஐதராபாத்தில் பல்காம்பேட் எல்லம்மா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் மிருணாள் தாக்கூர். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.