வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுக நடிகர்கள் என்கிற அளவில் வளர்ந்து கொண்டிருந்தவர்கள் தான் சிவகார்த்திகேயன், விமல், சூரி மற்றும் சதீஷ். இப்போது ஒவ்வொருவரும் திரையுலகில் அவர்களுக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதில் விமல், சிவகார்த்திகேயன், சதீஷ் அனைவருமே இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
2013ல் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் இருவரும் கதாநாயகனாக நடிக்க சூரி முக்கிய வேடத்தில் நடித்திருந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சிவகார்த்திகேயன், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த சூரி, விமல் மற்றும் சதீஷ் ஆகியோர் விமான நிலையத்தில் ஒன்றாக நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.
இந்த அபூர்வ சந்திப்பு குறித்த புகைப்படத்தை நடிகர் சதீஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், ‛கேடி பில்லா கில்லாடி ரெமோ' என்று இந்த சந்திப்பை குறிப்பிட்டுள்ளார்.




