ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுக நடிகர்கள் என்கிற அளவில் வளர்ந்து கொண்டிருந்தவர்கள் தான் சிவகார்த்திகேயன், விமல், சூரி மற்றும் சதீஷ். இப்போது ஒவ்வொருவரும் திரையுலகில் அவர்களுக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதில் விமல், சிவகார்த்திகேயன், சதீஷ் அனைவருமே இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
2013ல் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் இருவரும் கதாநாயகனாக நடிக்க சூரி முக்கிய வேடத்தில் நடித்திருந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த சிவகார்த்திகேயன், வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த சூரி, விமல் மற்றும் சதீஷ் ஆகியோர் விமான நிலையத்தில் ஒன்றாக நீண்ட நாளைக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர்.
இந்த அபூர்வ சந்திப்பு குறித்த புகைப்படத்தை நடிகர் சதீஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், ‛கேடி பில்லா கில்லாடி ரெமோ' என்று இந்த சந்திப்பை குறிப்பிட்டுள்ளார்.