'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
தமிழ், மலையாள சினிமாக்களில் 80களில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நதியா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்ட நதியா தற்போதும் அங்குதான் வசித்து வருகிறார்.
நேற்று ஹோலி பண்டிகை அவரது அபார்ட்மென்ட்டில் கொண்டாடி உள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்து, “அனைவருக்கு மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துகள். ஆலியா பட், ரன்பீர், ரஹா மற்றும் நண்பர்களுடன் ஹோலி கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நதியா, ஆலியா ஆகியோர் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வளாகத்தின் பார்க்கிங்கில் ரன்பீர், ஆலியா மீது வண்ணப் பொடிகளைத் தடவி நதியா ஹோலியைக் கொண்டாடியுள்ளார்.