சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுதினம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள மலையாளப் படம் 'ஆடுஜீவிதம்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகப் போகிறது. படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த வருடத்தைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் மலையாள சினிமாதான் சில வெற்றிகளையும், தரமான படங்களையும் கொடுத்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் வரவில்லை.
'ஆடுஜீவிதம்' படத்திற்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “'ஆடுஜீவிதம்'. உயிர் வாழ்வதற்குரிய ஒரு கதையைச் சொல்ல 14 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இது போன்ற மாற்றமும், முயற்சியும் ஒன்றாக இணைவது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும். இயக்குனர் பிளஸ்ஸி, மற்றும் குழுவினர், பிருத்விராஜ், ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிருத்விராஜ் தன்னுடைய நண்பர் என்பதால் ஒரு மலையாளப் படத்திற்கு வாழ்த்து சொல்லும் சூர்யா, இது போல தமிழ் சினிமாவில் வெளிவரும் நல்ல படங்களையும் பாராட்டினால் அந்தப் படங்களும் கொஞ்சம் ஓடும்.