ஆதிக் ரவிச்சந்திரன், ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை | குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை குழந்தையுடன் வந்து வாங்குறாங்க: பேரரசு கிண்டல் | விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு | டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை |

பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் நாளை மறுதினம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள மலையாளப் படம் 'ஆடுஜீவிதம்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகப் போகிறது. படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த வருடத்தைப் பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் மலையாள சினிமாதான் சில வெற்றிகளையும், தரமான படங்களையும் கொடுத்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் வரவில்லை.
'ஆடுஜீவிதம்' படத்திற்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “'ஆடுஜீவிதம்'. உயிர் வாழ்வதற்குரிய ஒரு கதையைச் சொல்ல 14 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இது போன்ற மாற்றமும், முயற்சியும் ஒன்றாக இணைவது வாழ்நாளில் ஒரு முறைதான் நடக்கும். இயக்குனர் பிளஸ்ஸி, மற்றும் குழுவினர், பிருத்விராஜ், ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிருத்விராஜ் தன்னுடைய நண்பர் என்பதால் ஒரு மலையாளப் படத்திற்கு வாழ்த்து சொல்லும் சூர்யா, இது போல தமிழ் சினிமாவில் வெளிவரும் நல்ல படங்களையும் பாராட்டினால் அந்தப் படங்களும் கொஞ்சம் ஓடும்.