நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
சின்னத்திரை நடிகை மகாலெட்சுமி, சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாக்களில் இருவரும் கவனம் ஈர்த்து வைரல் ஜோடியாக டிரெண்டாகி வருகின்றனர்.
இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள மகாலெட்சுமி மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அனைவருக்கும் முன்மாதிரியாய் தனது உடலுறுப்புகளை தானம் செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்த பிறந்தநாள் எனக்கு பல கலவையான உணர்வுகளால் நிரம்பி உள்ளது. முதலில் எனது கணவர் நள்ளிரவில் கேக் தந்து ஆச்சர்யப்படுத்தினார். அவரை எனது வாழ்க்கை துணையாக அடைந்ததை அதிர்ஷடமாக கருதுகிறேன். எனது மகனும் எனக்கு கேக் தந்து ஆச்சர்யப்படுத்தினான். என்னைச் சுற்றி அழகான ஆன்மாக்கள் இருப்பதால் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உள்ளேன்'' என பதிவிட்டுள்ளார்.
மகாலெட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள் அவரின் உடலுறுப்பு தானத்தையும் பாராட்டி வருகின்றனர்.