டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரை நடிகை மகாலெட்சுமி, சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாக்களில் இருவரும் கவனம் ஈர்த்து வைரல் ஜோடியாக டிரெண்டாகி வருகின்றனர்.
இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள மகாலெட்சுமி மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அனைவருக்கும் முன்மாதிரியாய் தனது உடலுறுப்புகளை தானம் செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்த பிறந்தநாள் எனக்கு பல கலவையான உணர்வுகளால் நிரம்பி உள்ளது. முதலில் எனது கணவர் நள்ளிரவில் கேக் தந்து ஆச்சர்யப்படுத்தினார். அவரை எனது வாழ்க்கை துணையாக அடைந்ததை அதிர்ஷடமாக கருதுகிறேன். எனது மகனும் எனக்கு கேக் தந்து ஆச்சர்யப்படுத்தினான். என்னைச் சுற்றி அழகான ஆன்மாக்கள் இருப்பதால் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உள்ளேன்'' என பதிவிட்டுள்ளார்.
மகாலெட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள் அவரின் உடலுறுப்பு தானத்தையும் பாராட்டி வருகின்றனர்.




