பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில படங்களை தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நகராட்சி திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்று தன்னை ஏமாற்றி ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி மோசடி செய்துவிட்டதாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று ரவீந்தர் சந்திரசேகரும், மகாலட்சுமியும் வாழும் அசோக் நகர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆணங்களின் அடிப்படையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.