பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில படங்களை தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நகராட்சி திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்று தன்னை ஏமாற்றி ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி மோசடி செய்துவிட்டதாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று ரவீந்தர் சந்திரசேகரும், மகாலட்சுமியும் வாழும் அசோக் நகர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆணங்களின் அடிப்படையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.