‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக லைகா நிறுவனத்திடம் வாங்கிய 26 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம் மீது விஷால் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சண்டக்கோழி- 2' படத்தை வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை செலுத்தாததால் அபராத தொகையுடன் சேர்த்து 4.88 கோடியை நான் செலுத்தியுள்ளேன். நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கு உத்தரவாதம் வழங்குமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏற்கெனவே ஒரு வழக்கு நடந்து வருவதால் இந்த பிரச்னையை கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்க்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் இந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.