பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் | போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி | மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் யேசுதாஸ் | சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சின்ன பையன் யார் தெரியுமா...? | டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் : ராய் லட்சுமி | தலைமைச் செயலகம் : வசந்த பாலன் இயக்கும் அரசியல் தொடர் | வாய்ப்பு தேடும் பிரியா ஆனந்த் | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் படம் | முதன்முறையாக இமான் இசையில் பின்னணி பாடிய மனோ |
இயக்குனரான சமுத்திரகனி தற்போது நடிப்பில் தான் பிஸியாக உள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‛யாவரும் வல்லவரே' படம் நாளை(பிப்., 15) ரிலீஸாகிறது. முன்பை போல் படங்கள் இயக்காதது பற்றி சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய நான் பட்டபாடு எனக்கு மட்டும் தான் தெரியும். அதேமாதிரி தான் அடுத்த சாட்டை என்ற படத்தை எடுத்தோம். அதற்கும் இதே நிலை தான். படத்தை எடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி வெளியிடும்போது இல்லை. அதனால் தான் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்புக்கான வாய்ப்பு இருக்கும் இடத்தில் வேலை பார்க்கிறேன். மலையாள படங்கள் இங்கு ஓடுகின்றன. தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற நல்ல படங்கள் உள்ளன. சிறு பட்ஜெட் படங்களையும் வெளியிட உதவுங்கள்'' என்றார்.