கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

ஜெய் பீம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் இயக்குனராக மாறிய த.செ. ஞானவேல், தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, புதுச்சேரி, ஐதராபாத், மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.
ஐதராபாத்தில் ரஜினிகாந்த் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் பஹத் பாசில், ராணா, துஷாரா விஜயன் என இதுவரை ரஜினியுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்களுக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினி உடன் இணைந்து நடித்த சந்தோஷத்தில் அவருடன் படப்பிடிப்பு முடிந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரித்திகா சிங்.




