'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களாகட்டும், மம்முட்டி நடித்த பிரம்மயுகம் போன்ற பெரிய பட்ஜெட் படமாகட்டும் அனைத்துமே வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆடுஜீவிதம்.
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் சேர்த்து ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'நின்னே கிணாவும் காணும்' என்கிற பாடலை பாடகர் விஜய் யேசுதாஸுடன் இணைந்து பாடியுள்ளார் பின்னணிப் பாடகி சின்மயி. மலையாளத்தில் மட்டுமில்லாது வெளியாகும் ஐந்து மொழிகளிலும் சின்மயியே இந்த பாடலை பாடியுள்ளார்.
ஆனால் இந்த பாடல்கள் அனைத்துமே படம் துவங்கப்பட்ட சமயத்தில் அதாவது ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என்கிற தகவலையும் கூறியுள்ள சின்மயி, இந்த படத்திற்காக முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல் இதுதான் என்றும், இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.