நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான சின்ன பட்ஜெட் படங்களாகட்டும், மம்முட்டி நடித்த பிரம்மயுகம் போன்ற பெரிய பட்ஜெட் படமாகட்டும் அனைத்துமே வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ஆடுஜீவிதம்.
பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் அவர் மீண்டும் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் சேர்த்து ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'நின்னே கிணாவும் காணும்' என்கிற பாடலை பாடகர் விஜய் யேசுதாஸுடன் இணைந்து பாடியுள்ளார் பின்னணிப் பாடகி சின்மயி. மலையாளத்தில் மட்டுமில்லாது வெளியாகும் ஐந்து மொழிகளிலும் சின்மயியே இந்த பாடலை பாடியுள்ளார்.
ஆனால் இந்த பாடல்கள் அனைத்துமே படம் துவங்கப்பட்ட சமயத்தில் அதாவது ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என்கிற தகவலையும் கூறியுள்ள சின்மயி, இந்த படத்திற்காக முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல் இதுதான் என்றும், இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.