என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சின்னத்திரை நடிகையான தீபா, சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த சாய் கணேஷ்பாபு என்பவரை காதலித்து வந்தார். தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் மகன் இருப்பதால் சாய் கணேஷ்பாபு வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் சாய் கணேஷ்பாபு தற்போது தீபாவுடன் வாழாமல் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து தன் கணவருடன் சேர்த்து வைக்கும்படி தீபா போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது புகாரில் சாய் கணேஷ்பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபா தனது இரண்டாவது திருமணத்திலும் ஏமாந்துவிட்டாரே! என ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.