இனி, நடிகர்கள் பற்றி அவதுாறாக பேசினால்..: நடிகர் சங்க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் | பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் வரிசையில் 'மிராய்' நாயகன் தேஜா சஜ்ஜா | டிரைலரைப் பார்த்தால் 'மிஸ்டர் பாரத்' மாதிரிதான் இருக்கு? | 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் | ஆஸ்கர் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையா ? | குஷி பார்ட் 2 உருவாகுமா? விஜய் மகன், ஜோதிகா மகள் நடிப்பார்களா? | ஏழு பெண்களின் பிரச்னைகளை பேசும் விதமாக ‛கமல் ஸ்ரீதேவி' பெயரில் வெளியாகி உள்ள படம் | இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன் | பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் பேசிய வார்த்தைகள் | பத்து வருட பயணத்தில் முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் சந்தோசத்தில் வர்ஷா பொல்லம்மா |
சின்னத்திரை நடிகையான தீபா, சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த சாய் கணேஷ்பாபு என்பவரை காதலித்து வந்தார். தீபாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பள்ளி செல்லும் வயதில் மகன் இருப்பதால் சாய் கணேஷ்பாபு வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் புகைப்படங்களும் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் சாய் கணேஷ்பாபு தற்போது தீபாவுடன் வாழாமல் அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து தன் கணவருடன் சேர்த்து வைக்கும்படி தீபா போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது புகாரில் சாய் கணேஷ்பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபா தனது இரண்டாவது திருமணத்திலும் ஏமாந்துவிட்டாரே! என ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.