'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவர்களாக தாங்கள் பங்கேற்கவில்லை என செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தனர். அதேசமயம் புதியதோர் நிகழ்ச்சியை தாமுவும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து செய்யப் போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் தாமுவுடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ ஒன்றை திடீரென நீக்கியுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பல்வேறு கோணங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தற்போது பதிலடித்த கொடுத்துள்ள வெங்கடேஷ் பட் 'பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமோ. இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ. சொல் தவறினாலும் நட்பு மாறாது' என அழகிய தமிழில் தங்கள் நட்பு உடையவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.