20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு சரித்திரக் கதைகள் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும் வெளிவந்தது.
இந்நிலையில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பிரம்மாண்டப் படங்களாகத் தயாரிக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி 'ராமாயணம்' படத்தை இயக்க உள்ளார்.
அடுத்த மாதம் ஏப்ரல் 17ம் தேதி ராம நவமி அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபீர், சீதையாக சாய் பல்லவி நடிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல், கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங், கைகேயி கதாபாத்திரத்தில் லாரா தத்தா நடிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ராமாணயத்தை மையமாக வைத்து இதற்கு முன் சில மொழிகளில் படங்கள் வந்துள்ளன. புதிதாக உருவாக உள்ள இந்த ராமாயணப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.