டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு சரித்திரக் கதைகள் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும் வெளிவந்தது.
இந்நிலையில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பிரம்மாண்டப் படங்களாகத் தயாரிக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி 'ராமாயணம்' படத்தை இயக்க உள்ளார்.
அடுத்த மாதம் ஏப்ரல் 17ம் தேதி ராம நவமி அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபீர், சீதையாக சாய் பல்லவி நடிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல், கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங், கைகேயி கதாபாத்திரத்தில் லாரா தத்தா நடிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ராமாணயத்தை மையமாக வைத்து இதற்கு முன் சில மொழிகளில் படங்கள் வந்துள்ளன. புதிதாக உருவாக உள்ள இந்த ராமாயணப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.