2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு சரித்திரக் கதைகள் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும் வெளிவந்தது.
இந்நிலையில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பிரம்மாண்டப் படங்களாகத் தயாரிக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி 'ராமாயணம்' படத்தை இயக்க உள்ளார்.
அடுத்த மாதம் ஏப்ரல் 17ம் தேதி ராம நவமி அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபீர், சீதையாக சாய் பல்லவி நடிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல், கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங், கைகேயி கதாபாத்திரத்தில் லாரா தத்தா நடிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ராமாணயத்தை மையமாக வைத்து இதற்கு முன் சில மொழிகளில் படங்கள் வந்துள்ளன. புதிதாக உருவாக உள்ள இந்த ராமாயணப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.