நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

பாலிவுட்டின் பிரபல நடிகை அங்கிதா லோகண்டே. ஹிந்தி டிவி தொடர்களில் பிரபலமாகி மணிகர்ணிகா, பாஹி 3 உள்ளிட்ட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 19 வயதில் தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது : ‛‛தென்னிந்திய படம் ஒன்றின் ஆடிசனுக்கு சென்றிருந்தேன். அந்த படத்திற்கு ஒப்பந்தம் போட வரச் சொன்னார்கள். நான் என் அம்மாவிடம் இந்த செய்தியை மகிழ்ச்சியாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றேன். அதேசமயம் இவ்வளவு எளிதாக நமக்கு எப்படி இந்த வாய்ப்பு அமைந்தது என யோசித்தேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்றபோது என்னை மட்டும் ரூமிற்கு அழைத்தனர். என்னுடன் வந்தவர் வெளியே அமர வைக்கப்பட்டார்.
எனக்கு அந்த சமயம் 19 வயது தான். சினிமாவில் நாயகியாக தீவிரமாக முயற்சித்து வந்தேன். தயாரிப்பாளருடன் நான் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி அங்கிருந்தவர் கேட்டார். அதற்கு நான் உங்கள் தயாரிப்பாளருக்கு திறமையான நடிகை தேவையில்லை, உடன் படுக்க ஒரு பெண் மட்டுமே போதும். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். இதுபோன்று பல நிகழ்வுகளை எதிர் கொண்டுள்ளேன். அதை நினைத்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது'' என்றார் அங்கிதா.
அந்த தென்னிந்திய தயாரிப்பாளர் யார் என்பதை அங்கிதா குறிப்பிடவில்லை.