‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பழம்பெரும் நாடக, சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரும், கதாசிரியருமான ‛அடடே' மனோகர், 77, சென்னையில் காலமானார். சென்னை, குமரன்சாவடி பகுதியில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
சென்னையை சேர்ந்த மனோகர் ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றினார். அங்கு இருந்தபடியே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். 3500 மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மனோகர். எண்ணற்ற டிவி, ரேடியோ நாடகங்களில் தனது பங்களிப்பை சிறப்புற செய்திருக்கிறார். அதில் 6 நாடகங்களுக்கு மேல் அவரே எழுதி, இயக்கி உள்ளார். இதுதவிர வெள்ளித்திரையில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களிலேயே இவர் நடித்தார். குறிப்பாக எஸ்வி சேகர், கிரேஸி மோகன் உள்ளிட்டோரின் நாடகங்களில் பணியாற்றி உள்ளார்.
‛‛சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, பிளைட் 172, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெசஸ் ரமணி, பிரேமி, இரயில் சிநேகம், வண்ணக்கோலங்கள்...'' உள்ளிட்டவை சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்த முக்கிய நாடகங்கள் ஆகும்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.