விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
கவுதம் மேனன் இயக்கத்தில் வருண் நாயகனாக நடித்துள்ள படம் ‛ஜோஸ்வா - இமைபோல் காக்க'. ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
கவுதம் மேனன் அளித்த பேட்டி : ‛‛வருண் சில படங்களில் நடித்திருந்தாலும் நான் அவரை புதுமுகமாகவே பார்த்தேன். முதலில் காதல் படமாக திட்டமிட்டோம். ஆனால் நான் தான் வருணை ஆக்ஷன் ஹீரோவாக பண்ண வைக்க முடியும் என நம்பினேன். எந்த டூப்பும் இல்லாமல் அவரே ஆக்ஷனில் நடித்துள்ளார். இதற்காக மூன்று மாதம் பாரிஸில் பயிற்சி எடுத்தார். கொரோனா காலத்தால் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
பெரிய நடிகர்களுடன் படம் பண்ணும்போது தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருப்பார். எனக்கு புதுமுகங்கள் கொஞ்சம் வசதியாக இருக்கும். அறிமுக நடிகர்கள் பலருடன் வேலை பார்த்துள்ளேன். வருண் நான் என்ன கேட்டாலும் அதை செய்து கொடுப்பார். செருப்பே இல்லாமல் சண்டை காட்சிகளில் மிரட்டி உள்ளார்.
படத்தில் உருகி உருகி காதலிக்கும் காட்சிகள் இருக்காது. இரண்டு மணிநேரம் ஆக்ஷன் தான் இருக்கும். 11 ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. பொதுவாக என் பட தலைப்பு கவிதையாக இருக்கும். இதில் படத்தின் கேரக்டரான ஜோஸ்வா பெயரை வைத்து அதன் உடன் இமைபோல் காக்க என்ற டேக்லைன் இணைத்தோம். ஹீரோயினை பாதுகாக்கும் உயர்தர பாடிகார்டு வேடத்தில் வருண் நடித்துள்ளார். டிடி, கதிர், கிருஷ்ணா நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளனர்.
நான் நடிப்பது என்பது நானாக தேர்ந்தெடுக்கவில்லை. அதுவாக அமைந்தது. கண்ணாடி முன்னாடி என் முகம் பார்த்து நடிகனாக என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகர் ஆனேன். நிறைய பட வாய்ப்பு வருகிறது. இப்போது எந்த படமும் ஒப்புக்கொள்ளவில்லை. எடிட்டிங், டப்பிங் என்று இயக்குனருக்கான வேலையே சரியாக இருக்கிறது'' என்றார்.