22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு இயக்குனரும் நடிகருமான சேரன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். சேரன் வெளியிட்ட அறிக்கையில், ‛வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கமும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.
நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோவில், ‛‛சமீப காலமாக சினிமா நடிகைகளை பொது வெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத ஒரு விஷயத்தை பார்த்த மாதிரி எப்படி பேசலாம். ஏவி.ராஜூவுக்கு கட்சிக்குள் பிரச்னை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசலாமா? அவதூறாக பேசிய ராஜூ மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்'' எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா, ‛‛கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்'' என தெரிவித்துள்ளார்.