என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தா.சே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி, திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தை குறித்து நமக்கு சுவாரஸ்யமாக கிடைத்த தகவலின்படி, 80, 90 காலகட்டங்களில் நடக்கும் போலி என் கவுண்டர்களுக்கு எதிராக போராடும் கதை களத்தில் இதனை படமாக்கி வருகின்றனர். 80, 90 காலகட்டத்தை உருவாக்க கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட பிரமாண்டமான அரங்குகளை படக்குழுவினர் உருவாக்கினர் என்கிறார்கள்.