எம்ஜிஆர் பற்றி அவதூறு கருத்து : மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | குடும்ப பெருமை என்னை துரத்துகிறது : விக்ரம் பிரபு | விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா | மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர் | பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் | பிளாஷ்பேக்: இயக்குனர் சொல்படி நடிக்க சம்பளத்தை உயர்த்திய எம்.ஆர்.ராதா | சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக் | ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் |

கடந்த 2018ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூலில் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டு இருந்தார் நடிகர் எஸ்.வி .சேகர். அதையடுத்து அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று எஸ். வி .சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அந்த அபராத தொகையை செலுத்தி விட்ட எஸ்.வி. சேகர், ஒரு மாத சிறை தண்டனை என்ற தீர்ப்பை எதிர்த்து மேலும் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் மீதான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




