மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தங்கலான், கங்குவா உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை சென்னையில் செயல்பட்டு வந்த அவரது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் புதிய கிளை தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் இதுவரை தமிழில் படங்களை தயாரித்து வந்த ஞானவேல் ராஜா, இனிமேல் ஹிந்தியில் பிரமாண்ட படங்களை தயாரிக்கப் போகிறாராம். அதன் காரணமாகவே மும்பையிலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாம். இது குறித்த தகவல், புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.