திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாலிவுட்டில் முன்னாள் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரிஷ்மா கபூர். அவருக்கும் தொழிலதிபரான சஞ்சய் கபூருக்கும் திருமணம் நடந்து பின் விவாகரத்து பெற்றனர். கடந்த வாரம் இங்கிலாந்தில் போலோ விளையாடிய போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் சஞ்சய் மரணம் அடைந்தார். தேனீ ஒன்று அவருடைய வாய் வழியே மூச்சுக்குழாயில் புகுந்ததே மாரடைப்புக்குக் காரணம் என்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சஞ்சய் கபூரின் உடல் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. தனது முன்னாள் கணவர் சஞ்சயின் உடலுக்கு தனது மகன், மகள், தங்கை கரினா கபூர், இவரது கணவர் நடிகர் சைப் அலிகான் ஆகியோருடன் சென்று கரிஷ்மா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கரிஷ்மாவுக்கு முன்னதாகவே நந்திதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இரண்டே வருடங்களில் அவரைப் பிரிந்துள்ளார் சஞ்சய். கரிஷ்மாவுடன் 11 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளார். பின்னர், மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார்.