தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதற்கு திரையுலகினர் பலரும் நிதி அளித்துள்ளனர். இடையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பாக நடந்த பிரச்னையால் இந்த பணிகள் நின்று போகின. தற்போது மீண்டும் கட்டடத்தை கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க இன்னும் பல கோடி நிதி தேவைப்படுகிறது. இதை திரட்ட பல்வேறு முயற்சிகளை நடிகர் சங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி, நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். இதை நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன், செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய உதயநிதிக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.