ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித்துக்கு 'தீனா', விஜயகாந்த்துக்கு 'ரமணா', சூர்யாவுக்கு 'கஜினி', விஜய்க்கு 'துப்பாக்கி' என தமிழிலும், ஆமீர்கானுக்கு 'கஜினி' என ஹிந்தியிலும் அவர்களுக்கு திருப்புமுனை தந்த படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.
ரஜினிகாந்த் நடிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'தர்பார்' பட தோல்விக்குப் பின் அவர் இயக்கத்தில் நடிக்க விஜய் கூட தயங்கி கதை பிடிக்கவில்லை என்று சொன்னது சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்று. கடந்த நான்கு வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்தார் ஏஆர் முருகதாஸ்.
இடையில் ஒரு அனிமேஷன் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வந்தது. ஆனால், சிவகார்த்திகேயன் நடிக்க ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என கடந்த வருடம் அறிவித்தார்கள். சில மாத தாமதங்களுக்குப் பிறகு நேற்று அப்படத்தின் படப்பிடிப்பு திடீரென ஆரம்பமானது.
நேற்றைய ஆரம்ப நிகழ்வு குறித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் புகைப்படங்களைப் பகிர்ந்து, “இந்த அற்புதமான திறமை கொண்டவர்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சி. இவர்களுடன் இணைந்து சம்திங் ஸ்பெஷல் உங்களுக்காக வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த சிறப்பான பயணம் இன்று ஆரம்பமானது,” என சிவகார்த்திகேயன் அதற்கு மேற்கோள்காட்டி பதிலளித்துள்ளார்.