புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
369 சினிமா என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் 'நாதமுனி'. மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித், ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இதில் ஐஸ்வர்யா தத்தா 10 வயது சிறுமிக்கு தாயாக நடித்துள்ளார். 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா அதன் பிறகு பாயும்புலி, அச்சாரம், சத்ரியன், காபி வித் காதல், இரும்பன், கன்னித்தீவு, பர்ஹானா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முதன் முறையாக இந்த படத்தில் 10 வயது சிறுமிக்கு தாயாகவும், கிராமத்து பெண்ணாகவும் நடிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மாதவன் லக்ஷ்மன் கூறும்போது, “சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சகமனிதர்களின் செயல்களால் எவ்வாறு வாழ்வில் வினைபுரிகிறது என்பதை கருத்தாளமிக்க கதையாக உருவாகியிருக்கும் படம் தான் 'நாதமுனி'. சாமானிய தகப்பனாக இந்திரஜித் இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். ஏழைத்தாயாக இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா வாழ்ந்திருக்கிறார். பாடகர் அந்தோணிதாசன் மற்றும் ஜான் விஜய் மற்றும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் கதை சொன்னதுடன் கதையை பாராட்டி இசை அமைக்க ஒப்புக் கொண்டார். படத்திற்கு முத்தான பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்” என்றார்.