விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' |
சமீபத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் புளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து வெளியான இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருந்தார். படமும் ஓரளவுக்கு வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் கதாநாயகனாக ஜெயக்குமார் அணுகியது நடிகர் கவினைத்தான். ஆனால் கவின் அப்போது வேறு சில படங்களுக்கு தேதியை ஒதுக்கி இருந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.
அதன்பிறகு தான் இந்த படம் அசோக் செல்வனிடம் சென்றது. அந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் ஒப்பந்தமாகி இருந்தார். ஏற்கனவே கீர்த்தி பாண்டியனுடன் நெருங்கிய நட்பில் இருந்த அசோக் செல்வன் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் தனது காதலையும் கீர்த்தி பாண்டியனிடம் தெரிவித்தார். இந்த படம் வெளி வருவதற்குள் அவர்கள் காதலும் திருமணத்தில் கை கூடியது.