பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கை போலவே மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பு பெற்ற இந்த படம் பாலிவுட்டிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
கடந்த மாதம் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகரான ஜெகதீஷ் பண்டாரி என்பவர் துணை நடிகை ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாலும், ஜெகதீஷ் காரணமாக படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தாலும் தற்போது அதை ஈடு செய்யும் விதமாக புஷ்பா 2 படக்குழுவினர் இரண்டு யூனிட்டுகளாக பிரிந்து காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.