டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‛கோட்' படத்தில் நடித்து வரும் விஜய், அரசியல் கட்சியை அறிவித்து விட்டதால் 69வது படத்தோடு தனது திரை வாழ்க்கையை முடித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவது யார் என்ற ஒரு செய்தி கோலிவுட்டில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், அட்லி, எச்.வினோத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கார்த்திக் சுப்புராஜ் அவரிடத்தில் கதை சொல்லி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அட்லியும் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே எச்.வினோத் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த மூன்று பேர்களில் எச்.வினோத் கூறிய அரசியல் கதையிலேயே விஜய் அடுத்த படியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.




