இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பொன்னியின் செல்வன், லியோ படங்களை அடுத்து தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய போது அஜித்துடன் இணைந்து நடித்து வந்தார் திரிஷா. ஆனால் பின்னர் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் பிரியன் மாரடைப்பால் இறந்ததால் சிறிது காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகு கடுமையான பனிப்பொழிவு மற்றும் சூறாவளி வீசியதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார்கள். இப்போதும் அதே பனிப்பொழிவு நிலவிக் கொண்டிருப்பதால் அடுத்தபடியாக சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் இப்படி பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி படக்குழுவால் திரிஷாவின் கால்ஷீட்டை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் கமலுடன் நடிக்கும் திரிஷா, மலையாளத்தில் ராம், ஐடென்டிட்டி மற்றும் ஹிந்தியில் சல்மான் கானுடன் ஒரு படம் என பல படங்களுக்கு கால்சீட் கொடுத்து விட்டதால் விடாமுயற்சி படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதன் காரணமாக அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கிவிட்டு திரிஷாவின் கால்சீட் எப்போது கிடைக்கிறதோ அப்போது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கு இயக்குனர் மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளார்.