ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் |
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வேங்கை, குட்டி ஆகிய படங்கள் வெளியாகி பாடல்கள் வெற்றி பெற்றன. தற்போது நீண்ட வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.