போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் கண்டு கொள்ளப்படவில்லை என்றாலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' என இரண்டு பெரிய வெற்றிகளை அடுத்தடுத்து கொடுத்து பலரையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் பொன்ராம். அதற்குடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'சீமராஜா, எம்ஜிஆர் மகன்' ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன.
அடுத்தடுத்த தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த வாரம் டிசம்பர் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமா பார்த்து விட்டது. இந்த 'டிஎஸ்பி' என்ன செய்துள்ளார் என்பதை இரண்டு நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமாவில் இழந்த தனது இடத்தை பொன்ராம் மீண்டும் பிடிக்க முடியும்.
விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் முக்கியமான படம்தான். '96' படத்திற்குப் பிறகு அவர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே அந்த அளவிற்குப் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை. இந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. வில்லனாக நடித்த 'விக்ரம்' பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே, இந்த 'டிஎஸ்பி'யின் வெற்றியை விஜய் சேதுபதியும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.