ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் கண்டு கொள்ளப்படவில்லை என்றாலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' என இரண்டு பெரிய வெற்றிகளை அடுத்தடுத்து கொடுத்து பலரையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் பொன்ராம். அதற்குடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'சீமராஜா, எம்ஜிஆர் மகன்' ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன.
அடுத்தடுத்த தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த வாரம் டிசம்பர் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமா பார்த்து விட்டது. இந்த 'டிஎஸ்பி' என்ன செய்துள்ளார் என்பதை இரண்டு நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமாவில் இழந்த தனது இடத்தை பொன்ராம் மீண்டும் பிடிக்க முடியும்.
விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் முக்கியமான படம்தான். '96' படத்திற்குப் பிறகு அவர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே அந்த அளவிற்குப் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை. இந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. வில்லனாக நடித்த 'விக்ரம்' பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே, இந்த 'டிஎஸ்பி'யின் வெற்றியை விஜய் சேதுபதியும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.