கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் கண்டு கொள்ளப்படவில்லை என்றாலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' என இரண்டு பெரிய வெற்றிகளை அடுத்தடுத்து கொடுத்து பலரையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் பொன்ராம். அதற்குடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'சீமராஜா, எம்ஜிஆர் மகன்' ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன.
அடுத்தடுத்த தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த வாரம் டிசம்பர் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமா பார்த்து விட்டது. இந்த 'டிஎஸ்பி' என்ன செய்துள்ளார் என்பதை இரண்டு நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமாவில் இழந்த தனது இடத்தை பொன்ராம் மீண்டும் பிடிக்க முடியும்.
விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் முக்கியமான படம்தான். '96' படத்திற்குப் பிறகு அவர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே அந்த அளவிற்குப் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை. இந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. வில்லனாக நடித்த 'விக்ரம்' பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே, இந்த 'டிஎஸ்பி'யின் வெற்றியை விஜய் சேதுபதியும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.