23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
ஞானவேல்ராஜா தயாரித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் வரிபிடித்தம் செய்தே வழங்கி உள்ளார் ஞானவேல்ராஜா. ஆனால் பிடித்தம் செய்த தொகையை அவர் வருமானவரித்துறைக்கு கட்டாததால் சிவகார்த்திகேயன் வங்கி கணக்கில் இருந்து 12 லட்சத்தை வருமானவரித்துறை எடுத்துக் கொண்டது.
இதனை எதிர்த்து சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “நான் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்துக்காக 2018ம் ஆண்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 15 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் போட்டார். 2019ம் ஆண்டு மே மாதம் படம் வெளியான நிலையில், எனது சம்பள தொகையில் வருமான வரியை ஞானவேல் ராஜா பிடித்தம் செய்தார். ஆனால் பிடித்தம் செய்த வரியை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை. இதன் காரணமாக வருமான வரி பிடித்தத்தை எனது வங்கி கணக்கில் இருந்து வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இந்த தொகையை திரும்ப வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.