நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை | அறிமுக இயக்குனர் டைரக்ஷனில் 365வது படத்தை அறிவித்த மோகன்லால் | 149 நாட்கள் : வார் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிருத்திக் ரோஷன் |
தமிழகத்தை சேர்ந்த பிரபல பக்தி பாடகர் வீரமணிதாசன். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 6 ஆயிரம் பக்தி பாடல்கள் பாடி உள்ளார். பல திரைப்படங்களில் பக்தி பாடல்களை பாடி உள்ளார். இசை கலைஞர்களுக்கு கேரள அரசு வழங்கும் உயரிய விருது 'ஹரிவராசனம்' விருது. சபரிமலை அறங்காவல் அமைப்பும், கேரள அரசும் இணைந்து இந்த விருதை வழங்கி வருகிறது. இதற்கு முன்பு கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இந்த விருது வீரமணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருதை மாநில அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.