பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லாலை வைத்து இயக்கிய திரிஷ்யம் படம் மூலமாக தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பேசப்படும் இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் விதமான கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்து வரும் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நேர் திரைப்படமும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜீத்து ஜோசப்பின் மகள் கேத்தியும் தந்தையின் வழியில் தானும் இயக்குனர் பாதையில் அடி எடுத்து வைத்து தனது முதல் படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்து விட்டார்.
'பார் ஆலிஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல், ஓடிடி தளங்களுக்கும் செல்லாமல் இன்று குட்டி ஸ்டோரீஸ் என்கிற யுடியூப் சேனலில் நேரடியாகவே ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை இயக்குனர் ஜீத்து ஜோசப் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் திரிஷயம் புகழ் எஸ்தர் அனில் கதாநாயகியாக நடித்துள்ளார். தந்தையைப் போல மகளும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.




