நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
மலையாள நடிகர் பிரித்விராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் மாறினார். அதன்பிறகு ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கிய பிரித்விராஜ் அடுத்ததாக லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் துவங்க உள்ளார். தான் இயக்கிய முதல் படத்திலேயே குடும்ப அரசியல், வாரிசு அரசியல் ஆகியவற்றை மையப்படுத்திய ஒரு கதையை தேர்ந்தெடுத்திருந்தார் பிரித்விராஜ்.
அதேபோல கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஜன கன மன மற்றும் குருதி என்கிற என்கிற அரசியல் கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருந்தார் பிரித்விராஜ். இதனை தொடர்ந்து இயக்குனர்கள் சிலர் அவரை தாங்கள் இயக்கும் அரசியல் சார்ந்த படங்களில் நடிக்க அழைத்தப்போது அந்த படங்களில் நடிக்க மறுத்து விட்டார் பிரித்விராஜ்.
இதுகுறித்து சமீபத்தில் பிரித்விராஜ் கூறும்போது, “அரசியல் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதோ நடிப்பதோ எனக்கு ஒரு பிரச்சனை இல்லை. அதே சமயம் அரசியல் உள்நோக்கத்துடன் ஒரு தரப்பினரை குறிவைத்து தாக்கும் விதமாக எடுக்கப்படும் படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. என்னுடைய லூசிபர் திரைப்படமும் ஜன கன மன திரைப்படமும் பொதுவான அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தியே உருவாகியிருந்தது” என்று கூறியுள்ளார்.