விவசாயி, சூர்யவம்சம், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள் | சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் |
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லாலை வைத்து இயக்கிய திரிஷ்யம் படம் மூலமாக தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பேசப்படும் இயக்குனராக உயர்ந்தார். தொடர்ந்து ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் விதமான கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்து வரும் ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நேர் திரைப்படமும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஜீத்து ஜோசப்பின் மகள் கேத்தியும் தந்தையின் வழியில் தானும் இயக்குனர் பாதையில் அடி எடுத்து வைத்து தனது முதல் படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்து விட்டார்.
'பார் ஆலிஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தியேட்டர்களுக்கு வராமல், ஓடிடி தளங்களுக்கும் செல்லாமல் இன்று குட்டி ஸ்டோரீஸ் என்கிற யுடியூப் சேனலில் நேரடியாகவே ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை இயக்குனர் ஜீத்து ஜோசப் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் திரிஷயம் புகழ் எஸ்தர் அனில் கதாநாயகியாக நடித்துள்ளார். தந்தையைப் போல மகளும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.