டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரபல சின்னத்திரை நடிகையான காவ்யா வர்ஷினி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் மிரட்டியிருக்கிறார். தவிர மேடை பாடகியாகவும் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது தனது இண்ஸ்டாகிராமில் ரத்தம் சொட்ட சொட்ட பயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், மற்றொரு புகைப்படத்தில் சுற்றிலும் துப்பாக்கி வைத்திருக்கும் கமேண்டோக்களுக்கு நடுவில் நிற்கும் புகைப்படத்தையும், மேலும் ஒரு புகைப்படத்தில் நடிகர் ஜெய் ஆகாஷூடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது ஜெய் ஆகாஷூடன் காவ்யா வர்ஷினி நடிக்கும் புது ப்ராஜெக்டின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பலரும் காவ்யா வர்ஷினியின் புது ப்ராஜெக்ட் வெற்றியடைய வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




