தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! |

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் அவ்வப்போது நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தது, ஒவ்வொரு தொகுதிகளிலும் நூலகம் போன்றவற்றை அமைத்தார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அவரது மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி உதவினர்.
தற்போது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று(டிச., 30) சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விஜய் பின்னர் நெல்லையில் உள்ள மாதா மாளிகையில் 1500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
1500 குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் புதிய உடைகளை அவர் வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினர் சிலருக்கு நிதி உதவியும் அளித்தார்.




