ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
"கும்கிக்கு அடுத்ததாக, வளைகுடா வாழ் தமிழர்களை மையமாக வைத்து, ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார், பிரபு சாலமன். இந்த படத்தில், கவுதம் கார்த்திக் தான், ஹீரோவாக நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, கவுதமும், பிரபு சாலமனும், பேசியதாகவும், செய்திகள் வெளியாகின.ஆனால், அந்த படத்திலிருந்து, கவுதமை, பிரபு சாலமன் கழற்றி விட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. இப்போது, இந்த படத்தில், நான்ஈ படத்தில் நடித்த, நானி, ஹீரோவாக நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. தன் படத்தில் நடிக்கும் ஹீரோ, தமிழ், தெலுங்கு, என, இரு மொழி ரசிகர்களுக்கும், நன்றாக அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்பதால், நானியை தேர்வு செய்துள்ளாராம், பிரபு சாலமன். தன், முந்தைய படங்களில், கேரளாவைச் சேர்ந்த, அமலா பால், லட்சுமி மேனன் ஆகியோரை நடிக்க வைத்த, பிரபு சாலமன், இந்த படத்திலும், கேரளாவைச் சேர்ந்த, ஒரு புதுமுகத்தை தான், அறிமுகப்படுத்தப் போகிறாராம்.