Advertisement

சிறப்புச்செய்திகள்

கிஸ் படத்தின் முதல் பார்வை வெளியானது : பிப்., 14ல் டீசர் | மீண்டும் இணையும் மம்முட்டி - நயன்தாரா கூட்டணி | ரூ.100 கோடி வசூலை கடந்த அஜித்தின் ‛விடாமுயற்சி' | மார்கோ படத்தை ஆக்சன் படம் என விளம்பர படுத்தியது குறித்து பகிர்ந்த உன்னி முகுந்தன்! | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | அல்லு அர்ஜுனை இயக்கப் போகிறாரா அட்லி? | சீனியர் நடிகர்களின் படங்களால் காஜல் அகர்வாலுக்கு பாதிப்பு | நடிகை பார்வதி நாயருக்கு ‛டும் டும் டும்': சென்னை தொழிலதிபரை மணந்தார் | சாவா படத்திற்கு முன்பதிவு சிறப்பு | ஓராண்டுக்கு பிறகு ஓடிடியில் வரப்போகும் ரஜினியின் லால் சலாம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாக்ஷி மாலிக் எதிர்கொண்டது பேரழிவு- ரித்திகா சிங் வேதனை!!

24 டிச, 2023 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Ritika-Singh-on-Sakshi-Malik-decision

2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். ரியல் குத்து சண்டை வீரரான இவர் அதன்பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே என பல படங்களில் நடித்தவர், தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இதற்கு முன்பு இந்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷனின் உறவினர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மல்யுத்த வீராங்கனைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டில்லியில் மீடியாக்களை சந்தித்த சாக்ஷி மாலிக், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக ஒரு பெண்தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் போட்டியிட்ட போட்டியாளர்களில் ஒரு பெண் கூட இல்லை எனவும் அவரது வருத்தத்தை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்டு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிஜ் பூஷனின் உறவினரே தலைவராக இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அதனால் தான் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். சாக்ஷி மாலிக்கின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் நடிகையும் குத்துச்சண்டை வீராங்கனையுமான ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், சாக்ஷிமாலிக்கை இப்படி ஒரு நிலையில் பார்ப்பது இதயத்தை உடைக்கிறது. ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை தேடி கொடுத்தவர். இத்தனை ஆண்டுகள் கடின உழைப்பினையும் கனவுகளையும் நம்பிக்கைகளையும் கைவிட்டு நான் விலகுகிறேன் என்று அவர் கூறியிருப்பது மிகப்பெரிய பேரழிவு. தற்போது போராட்டத்தின் போது அவருக்கு நடந்த அவமரியாதை கொடுமையானது என்று பதிவிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார் சேஸிங் காட்சியில் நடித்த திரிஷா! சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ!!கார் சேஸிங் காட்சியில் நடித்த ... 2023ல் 8 படங்கள் நடித்த வரலட்சுமி 2023ல் 8 படங்கள் நடித்த வரலட்சுமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in