மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் கம்மட்டிப்பாடம் என்கிற படம் வெளியானது. இயக்குனர் ராஜீவ் ரவி இயக்கிய இந்த படம் நிறைய விருதுகளையும் பெற்றது. குறிப்பாக ஜெயிலர் பட வில்லனான விநாயகனின் நடிப்புத்திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அதேசமயம் அந்த படத்திலேயே ஜேடி காசா என்கிற ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு அடையாளம் பெற்றவர் அஷ்ரப் மல்லிசேரி. அந்த படத்தில் கிடைத்த அறிமுகத்துடன் அப்படியே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். சில வருட போராட்டத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம் படங்களில் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களை நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுளக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸின் தந்தையாக நடித்திருந்தவர் இவர் தான். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் எழில் தற்போது தான் இயக்கி வரும் படத்தில் இவரை வில்லனுக்கு முற்றிலும் நேர்மாறான காமெடி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஷ்ரப் மல்லி சேரி மலையாளத்தை விட தமிழில் நல்ல கதாபாத்திரங்களும் நல்ல சம்பளமும் கிடைக்கிறது என்கிறார்.




