'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா |
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர்களின் ஒருவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான இயக்குனர் தேஜா, நடிகர் ராணாவை வைத்து நேனே ராஜா நேனே மந்திரி என்கிற ஹிட் படத்தை சில வருடங்களுக்கு முன்பு கொடுத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ராணாவை வைத்து ராட்சச ராஜா என்கிற புதிய படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படம் 1930களில் சென்னையில் நடைபெறுவது போன்று உருவாக்கப்பட இருக்கிறது. குறிப்பாக நிஜ சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குகிறார் தேஜா. இதற்கு கேஜிஎப், சலார் போன்று பீரியட் படங்களுக்கு இசையமைத்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர் ரவி பர்சூரை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். சென்னையில் தான் பிறந்து வாழ்ந்த காலகட்டங்களில் கேள்விப்பட்ட நிஜமான கேங்ஸ்டர் கதைகளை தான் இந்த படத்தில் சொல்ல இருக்கிறாராம் இயக்குனர் தேஜா.