டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சென்னை தி நகரின் மைய பகுதியில் அரண்மணை போன்று வீடிருந்தும் மும்பையில் குடியேறி இருக்கிறார் ஜோதிகா. அவரது மகன் மகளும் தற்போது மும்பையில் படிப்பை தொடர்கிறார்கள். ஜோதிகா கணவர் சூர்யா, மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். சூர்யாவின் பாலிவுட் பட பணிகளுக்காத்தான் அவர் குடும்பம் மும்பையில் குடியேறியது என்று முதலில் சொல்லப்பட்டது. அதன்பின் குடும்ப பிரச்னையால் ஜோதிகா மும்பை சென்றதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் என் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது விமான சேவை இல்லாததால் என்னால் அங்கு செல்ல கூட முடியவில்லை. அந்த சமயத்தில் யோசித்தேன். 25 வயதிலிருந்து நான் சென்னையில்தான் இருக்கிறேன். என் பெற்றோருடன் நான் இருந்த காலங்கள் குறைவு.
திருமணத்துக்குப் பின் பெண்கள் தங்கள் பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிவதில்லை. திருமணத்துக்குப்பின் பொறுப்புகள் கூடிவிடுவதால் அதனை விட்டு பெற்றோர்களுடன் நேரம் செலவழிப்பது குறைந்துவிடுகிறது. அதனால்தான் சிறிது நாள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதால் மும்பைக்கு மாறினேன். இது ஒரு தற்காலிக முடிவுதான்.
குழந்தைகளுக்கும் பள்ளி செல்ல வசதியாக உள்ளது. சூர்யா எப்போதும் எனக்கு துணையாக இருப்பார். நான் சந்தோஷமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சரியாக இருக்க வேண்டும் என நினைத்தார். இப்படித்தான் இருக்க வேண்டும் என எப்போதும் வற்புறுத்த மாட்டார். என்றார்.




