ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த வருடம் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது, தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மூலமாக படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது இந்திய அளவில் தெரிந்த நடிகராகிவிட்டார். தற்போது காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை தனது ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை மூலமாக தத்தெடுத்துள்ளார். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் முன்னெடுப்பாக இந்த செயலில் இறங்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி. இது தொடர்பாக இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமத்தில் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பெரியவர்களுடன் கலந்துரையாடினார் ரிஷப் ஷெட்டி.